இயக்குனர் சங்கரை தொடர்ந்து….. சேரன் மகளுக்கு பிரம்மாண்ட திருமணம்!

இயக்குனர் சங்கரை தொடர்ந்து….. சேரன் மகளுக்கு பிரம்மாண்ட திருமணம்!

சிறந்த படைப்பாளியாக தமிழ் சினிமாவில் பல்வேறு மென்மையான திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராகப் புகழ்பெற்றவர் தான் சேரன். இவர் முதன் முதலில் பாரதி கண்ணம்மா திரைப்படத்தை 1997 ஆம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, அழகா இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. மாயக்கண்ணாடி பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம்,யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ்பெற்றார். இந்நிலையில் சேரன் அவர்களின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு சுரேஷ் ஆதித்யா என்ற தொழிலதிபருடன் சென்னையில் பிரமாண்டமாக நேற்று திருமணம் முடிந்துள்ளது.இந்த திருமணத்தில் பல்வேறு இயக்குனர் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து சேரன் பதிவிட்டுள்ளதாவது,”நேற்று நடந்த என் மகளின் திருமணத்தில் எனது பலமாய் நின்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோசமாய் பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பிவைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் (இயக்குனர் ஆனவர்களும் வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.