ஆணவத்தால் அழிந்த வடிவேலு தற்போது சின்னத் திரைக்கு வருகிறார் சன் TV ஷோவில்

ஆணவத்தால் அழிந்த வடிவேலு தற்போது சின்னத் திரைக்கு வருகிறார் சன் TV ஷோவில்

வைகைப் புயல் வடிவேல், கடந்த சில வருடங்களாகவே பெரும் சிக்கலில் மாட்டி தவித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் கொடி கட்டிப் பறந்த வடிவேல் பின் நாட்களில் அவரது அகங்காரம் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்து. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்கவே முடியாத நிலையில் இருந்தார். சரி போனால் போகட்டும், அவருக்கு ஒரு செக்கன் இன்னிங்ஸ் கொடுத்துப் பார்கலாம் என நினைத்த லைக்கா சுபாஷ்கரன் அவர்கள், நாய் சேகர் படத்தை எடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

ஆனால் அதிலும் வடிவேல் சொதப்பி விட்டார். அதன் பின்னர் ஒரு அளவுக்கு அவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது மாமன்னன் தான். தற்போது வடிவேலை யாரும் கண்டு கொள்வதே இல்லை. இதனால் சலிப்படைந்த வடிவேல், சன் TV நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சின்னத் திரைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி பட் தற்போது விஜய் TV ல் இருந்து விலகி சன் TV இல் இணைந்துள்ள நிலையில். அவர் வடிவேலை அணுகி அதுமாதிரியான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். வைகைப் புயல் வடிவேலும் இதற்கு இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.