தமிழ்நாட்டில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்ய வேண்டும், அதனை ஊக்குவிக்க வேண்டும் என்ற காரணத்தால், லண்டன் மற்றும் அமெரிக்கா மேலும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் வருகை தர உள்ளார். அவர் இன்னும் 2 வாரங்களில் லண்டன் வர உள்ள நிலையில், முதல்வர் விஜயைச் சந்திக்க ஈழத் தமிழர்கள் சார்பாக பிரத்தியேக கூட்டம் ஒன்று லண்டனில் நடைபெற உள்ளது.
லண்டனில் வசிக்கும் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் விஜயை சந்தித்து உரையாட முடியும். மேலும் இரவு போசன உணவு உண்டு, அவரோடு நேரடியாகப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே கீழ்காணும் படிவத்தை(click the link) நிரப்பி அனுப்பி உங்கள் இடத்தை பதிவு செய்யவும். விஜய் அவர்களைப் பார்த்து பேசி செல்ஃபி எடுப்பதுதான் நோக்கம் என்றால் தயவுசெய்து முன்ப பதிவு செய்ய வேண்டாம். இது ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பு மட்டுமே. உங்களால் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடியும் என்றால், அல்லது அப்படி ஒரு உத்தேசம் இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்யவும். கீழ்காணும் படிவத்தை கிளிக் செய்து நிரப்பி அனுப்பவும். உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம். நன்றி.
தமிழ்நாட்டில் உள்ள சிறிய கடைகளில் சோலார் எனர்ஜி (சூரிய மின்சக்தி) அமைப்பது, இலங்கைப் பொருட்களைச் சென்னைக்குக் கொண்டு செல்வது போன்ற பல தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளன. எனவே, இவற்றைப்பற்றி விரிவாகக் கலந்தாலோசிக்க இக்கூட்டம் மிகவும் ஏதுவாக அமையும். யாழ்ப்பாணத்தில் தயாராகும் பல பொருட்களை அங்கிருந்து சென்னைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈழத் தமிழர்களின் தொழிற்துறை மேம்படும். இது போன்ற முக்கியத் தொழிற்துறை ஆய்வாகவே இக்கூட்டம் அமையவுள்ளது.