Posted in

ஜோசியர்கள் சொல்வதை பெரிதாக்க வேண்டாம் – விஜய் பிரதமர் ஆவார் என்ற பேச்சுகளுக்கு மாணிக்கம் தாகூர் நெத்தியடி!

சென்னை: 2029 மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் நாட்டின் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் மற்றும் சமூக வலைத்தளப் பிரசாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஜோசியர்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில் பேசப்படுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தேசிய அளவிலான பிரபலக் கருத்துக்கணிப்பில், பிரதமர் வேட்பாளர் ரேஸில் ராகுல் காந்தி, நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக விஜய்யின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, தவெக தொண்டர்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் விஜய்யை ‘நாளைய பிரதமர்’ எனத் தீவிரமாக டிரெண்ட் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் “ராகுல் காந்தியே 2029 பிரதமர் வேட்பாளர்” என எச்சரிக்கும் தொனியில் கருத்து தெரிவித்ததால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் ஒரே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். ஜோசியர்களும் சில தனிநபர்களும் தங்களின் சொந்த விருப்பங்களை அல்லது கணிப்புகளைச் சொல்வதை அரசியல் ரீதியான முடிவாகக் கருத முடியாது என்றும், இத்தகைய பிரசாரங்களையும் கருத்துக் கணிப்புகளையும் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தீவிரமாகக் கருதாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நரி மற்றும் யானையை மையமாகக் கொண்ட குட்டிக் கதை ஒன்றைச் பகிர்ந்துள்ள மாணிக்கம் தாகூர், பொய்க் கருத்துக்கணிப்புகள் மூலம் கூட்டணிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயலும் சக்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், கூட்டணியில் பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் நீடிப்பதாகத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்