பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் (Ishaq Dar), நேற்று (மார்ச் 29, 2026) இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டியை (Badr Abdelatty) வரவேற்றார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நான்கு நாடுகளின் (பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா) முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைக்காக எகிப்து அமைச்சர் பாகிஸ்தான் வந்துள்ளார். இத்தகைய உயர்மட்ட இராஜதந்திர நிகழ்வின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது அங்கிருந்தவர்களிடையே ஒரு நிமிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், எவ்விதப் பதற்றமும் காட்டாத இஷாக் தார், உடனடியாக எழுந்து தனது கடமைகளைத் தொடர்ந்தார். இது ஒரு தற்செயலான விபத்து மட்டுமே என்றும், இதனால் திட்டமிடப்பட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. பல நெட்டிசன்கள் இஷாக் தார் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி தெரிவித்தாலும், சர்வதேச அளவில் பாகிஸ்தான் தலைவர்கள் இதுபோன்ற 'தர்மசங்கடமான' தருணங்களைச் சந்திப்பது இது முதன்முறையல்ல என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதினுக்காக ஒரு வெற்று அறையில் காத்திருந்த வீடியோவும் இதேபோல வைரலானது குறிப்பிடத்தக்கது. இஷாக் தார் விழுந்த தருணம் தற்போது மீம்ஸாகவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்தைச் சீரமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
