பெங்களூரு என்றாலே ஐடி கம்பெனிகளும், டிராபிக்கும் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், அங்கு ஒரு கணவர் தனது மனைவி கொடுத்த "அல்ட்ரா மாடர்ன்" தொல்லையால் போலீஸ் ஸ்டேஷன் ஏறியிருப்பது தான் இப்போதைய ஹாட் நியூஸ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு அப்பாவி இளைஞருக்கும், ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் இன்ஜினீயராக இருக்கும் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் "ஹேப்பி அண்ணாச்சி" என ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில், போகப்போகத்தான் பொண்டாட்டியின் "சரக்கு" மேட்டர் கணவருக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த மேடம் தினமும் வேலை முடிந்து நண்பர்களுடன் பப், பார்ட்டி என செம "குத்து" போட்டுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார். "என்னங்க இதெல்லாம்?" என கணவர் தட்டிக்கேட்டால், "இதெல்லாம் சிட்டி லைஃப்ல ரொம்ப சாதாரணம், நீ தலையிடாதே" என கணவருக்கே நோஸ்கட் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தனது பழைய லவ் மேட்டர்களையும் கணவரிடம் சொல்லி "கடுப்பேத்தி" வந்துள்ளார். பஞ்சாயத்து பண்ணி குடும்பத்தினர் சேர்த்து வைத்தாலும், அந்தப் பெண் தனது ரூட்டை மாற்றவில்லை.
கொஞ்ச நாள் அமைதியாக இருந்த மனைவி, மீண்டும் தனது ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க ஆரம்பித்துள்ளார். இதுவே அதிர்ச்சி என்றால், அடுத்ததாக அவர் செய்த காரியம் தான் "உச்சக்கட்டக் கொடுமை". கணவரிடம் ஆபாச வீடியோக்களைக் காட்டி, "இதில் வருவது போலவே நீயும் என் தோழிகளுடன் ஜாலியாக இருக்க வேண்டும்" என அந்தப் பெண் கட்டாயப்படுத்தியுள்ளார். "Group SEX" ஆ..ஆ ..."ஐயோ சாமி, ஆளை விடுங்க!" என கணவர் அலறியும் விடாமல், அவரைப் பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் அந்தப் பெண் டார்ச்சர் செய்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மனைவியின் இந்த "சைக்கோ"த்தனமான டார்ச்சரைத் தாங்க முடியாமல், கணவர் தற்போது பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். "சரின்னு போனா, போட்ட நகையைக் கூடத் தரமாட்டேங்குறாங்க" எனப் புலம்பிய அந்த இளைஞர், இறுதியில் அம்ருதஹள்ளி போலீசில் தஞ்சம் புகுந்துள்ளார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணை விசாரித்து வருகின்றனர். "பொண்டாட்டி அமைச்சுக்கிறது எல்லாம் ஒரு கொடுப்பினை" என்பார்கள், ஆனால் இந்த இளைஞருக்குக் கிடைத்ததோ பெரும் "சோதனை" என ஏரியாவே இந்தச் சம்பவத்தைப் பேசிச் சிரிக்கிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !
