தேவையே இல்லாமல் கை வைத்துவிட்டோமோ என்று அமெரிக்காவே சிந்திக்கும் அளவு நிலைமை மோசமாகிவிட்டது. ஈரான் தனது கடல் எல்லையை மூடியதால், உலகில் பல நாடுகளில் energy விலை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் அமெரிக்கா மீது அதிருப்தியடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது. இந்த global சூழலில், ஈரானில் 7,000 நிலைகள் மீது தாக்குதல் நடத்தியும் எந்த பயனும் இல்லை.
ஈரான் தொடர்ந்தும் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று (24) சற்று முன்னரும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அரணை ஊடறுத்துச் சென்று தலைநகர் டெல்-அவீவ்வை தாக்கியுள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த crisis நிலைமையில், என்ன செய்வது என்று திகைத்த அமெரிக்கா, 5 நாள் யுத்த நிறுத்தம் என்று அறிவித்துள்ளது.
ஆனால் இதனை ஈரான் ஏற்கவில்லை. மாறாக, அமெரிக்கா யுத்த நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் ஜலசந்தி பக்கம் எண்ணெய் கப்பல்கள் செல்ல அஞ்சுகிறது என்றால், பிற நாட்டு போர் கப்பல்களும் அங்கே செல்ல அஞ்சுவது ஏன் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. மிகவும் குறுகிய இந்த கடல் வழிப் பாதையில் இருபுறமும் ஈரான் ராணுவம் நிலைகொண்டுள்ளது. போர் கப்பல் என்றாலும் சரி, எண்ணெய் கப்பல் என்றாலும் சரி, அவர்கள் நிச்சயம் தாக்குவார்கள். இது ஒரு மிகப் பெரிய strategic பிரச்சனையாக மாறியுள்ளது.
ஈரானிடம் அனுமதி பெற்ற சில நாட்டுக் கப்பல்கள் மட்டுமே இந்த வழியாகச் செல்ல முடியும். அதுவும் பெரிய கொடியை பறக்கவிட்டுச் சென்றால் மட்டுமே தப்பிக்க முடியும். இதில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அடங்குகின்றன. ஏனைய நாடுகள் தலையில் துண்டைப் போடும் நிலையில் உள்ளன. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்,
எரிபொருள் விலை அதிகரித்த நாடுகளில் மக்கள் தங்கள் ஆளும் அரசாங்கத்தையே குறை கூறி வருகின்றனர். இதனால் அடுத்த தேர்தலில் அந்த கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். இந்த காரணத்தால் உலகத் தலைவர்கள் பலர் அமெரிக்க அதிபர் ரம்பை நேரடியாக எதிர்க்கத் தயாராகிவிட்டார்கள். இதில் பிரித்தானிய அதிபர் கியர் ஸ்டார்மரும் அடங்குகிறார். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் — இது அமெரிக்காவுக்கு கிடைத்த மிகப் பெரிய பாடம், இந்த
