பிரிட்டனின் வார்விக்ஷயர் (Warwickshire) பகுதியில் உள்ள நுனீட்டன் (Nuneaton) பூங்காவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12 வயது சிறுமி ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தார்.
குற்றம் நடந்த சில நாட்களிலேயே, காவல்துறையினர் அகமது முலகிலை அவர் தங்கியிருந்த இடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். அதிகாலையில் அவர் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய போலீசார் அவரைச் சூழ்ந்து விலங்கிட்டனர். சோதனையின் போது அவரது மொபைல் போனில் இருந்து அந்தச் சிறுமியை வன்கொடுமை செய்த வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து 'சிறிய படகு' (Small boat) மூலம் சட்டவிரோதமாகப் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்த நான்கு மாதங்களிலேயே அவர் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் (Warwick Crown Court) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், அகமது முலகில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பிரிட்டனில் சமீபகாலமாக அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களால் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவது அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, அகதிகளின் பின்னணியைச் சரியாக ஆய்வு செய்யாமல் அனுமதிப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் எனப் எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்துள்ள போதிலும், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடையே நீடிக்கிறது.
