ஜப்பானின் அசகுச்சி (Asakuchi) நகரில் உள்ள என்ஜுயின் (Enjuin) கோயிலில், சுமார் 12 அங்குல நீளம் கொண்ட ஒரு மம்மி பல தசாப்தங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்த மர்மத்தை அறிவியல் பூர்வமாகத் துலக்க குராஷிகி அறிவியல் மற்றும் கலைப் பல்கலைக்கழகத்தின் (Kurashiki University of Science and the Arts) ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த மம்மி காகிதம், துணி மற்றும் பருத்தி ஆகியவற்றைக் கொண்டு ஒரு பொம்மை போல உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதி ஒரு பாலூட்டியின் முடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பற்கள் மற்றும் தாடைப்பகுதி ஒரு வகையான ஊனுண்ணி மீனிடம் இருந்து எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. உடலின் கீழ் பகுதி ஒரு உண்மையான மீனின் வால் மற்றும் செதில்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 1800-களின் பிற்பகுதியில் ஜப்பானியக் கைவினைஞர்களால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இத்தகைய விசித்திரப் பொருட்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காகவும், திருவிழாக்களில் காட்சிப்படுத்தவும் ஜப்பானியர்கள் உருவாக்கி வந்தனர்.
அறிவியல் ரீதியாக இது ஒரு பொம்மை என்று நிரூபிக்கப்பட்டாலும், என்ஜுயின் கோயில் நிர்வாகம் இதனைத் தொடர்ந்து புனிதமாகவே கருதுகிறது. "இந்த மம்மி பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையையும், பிரார்த்தனைகளையும் சுமந்து வந்துள்ளது.
