LONDON: 25-03-2026 7:50am GMT:
பிரிட்டனின் லீட்ஸ் (Leeds) நகரில் உள்ள St James's Hospital மகப்பேறு பிரிவு அருகே, ஒரு பெரும் சம்பவம் நடைபெற இருந்தது. முகமது ஃபாரூக் என்ற நபர் 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டுடன் அங்கே வந்திருந்தார்.
அந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நேதன் நியூபி (Nathan Newby) என்பவர், அந்த நபர் மிகவும் பதற்றமாக இருப்பதை கவனித்தார்.
பிரிட்டன் MI-5 உளவுத்துறை வெளியிட்ட தகவல் இதோ தமிழில் ...
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அந்த நபரிடம் அன்பாகவும் நிதானமாகவும் பேசிய நியூபி, அவரைத் திசைதிருப்பினார்.
இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இறுதியில் அந்த நபர் தனது திட்டத்தைக் கைவிட்டு, நியூபியிடமே போனை கொடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார்.
இந்த அதீத துணிச்சலைப் பாராட்டி, நேதன் நியூபிக்கு பிரிட்டனின் இரண்டாவது உயரிய விருதான George Medal வழங்கப்பட உள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2023ம் ஆண்டு நடந்துள்ளது. ஆனால் பிரித்தானிய பொலிசாரும் சரி, பிரித்தானிய உளவுத் துறையும் சரி இது தொடர்பாக வாயே திறக்கவில்லை. மேலும் பல தடவைகள், தாம் பல சதிகளை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மட்டுமே பிரித்தானிய உளவுத் துறை கூறி வருகிறது. ஆனால் உண்மையில் அதன் பின்னால் பல விடையங்கள் உள்ளது. அதனை அவர்கள் சில ஆண்டுகள் கழித்தே வெளியிடுகிறார்கள். மற்றும் தகவல் அறியும் சட்டம் ஊடாக சில மீடியாக்கள் இந்த ரகசிய தகவல்களை வெளியிடுகிறது. அந்த வகையில் நேற்று பிரிட்டன் உளவுத் துறை வெளியிட்ட இந்த அறிக்கையை நாம் தமிழில் தந்துள்ளோம். மேலும் இது போன்ற செய்திகளை அறிய அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள்.
