விதவிதமாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததை தாண்டி தற்போது

புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அப்துல்லா, 40, ஃபிளை துபை விமானம் மூலம் துபையில் இருந்து சென்னை வந்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வெளியே செல்ல முயன்ற அப்துல்லாவை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்து தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால் பதட்டத்துடன் காணப்பட்ட அப்துல்லா, பதில்கள் தெளிவாக கேட்காததாலும், அவரது முகக் கவசத்தை அகற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது முகக்கவசம் வழக்கத்தை விட அதிக எடையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும் அவரின் பையிலும், ஐபோன் 12 புரோ 10, பயன்படுத்திய ஐ போன்கள் 8, பயன்படுத்திய மடிக் கணினிகள் 9, 2 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 8.2 லட்சம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முகமது அப்துல்லா மொத்தம் ரூ 11.13 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை கடத்தி கொண்டுவந்துள்ளார்.