Posted in

நண்பருக்காகப் பாதையையே மாற்றிய முதல்வர் – லண்டன் பயணத்தில் எதிரொலிக்கும் விஜய் – விஷ்ணு ரெட்டியின் 34 ஆண்டுகால நட்பு!

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை விமான நிலையத்தில் தனது அரசுகளுக்கான பிரத்யேக விஐபி பாதையைத் தவிர்த்துவிட்டுப் சாதாரணப் பயணிகள் பயன்படுத்தும் வழியில் சென்று லண்டன் விமானமேறிய நெகிழ்ச்சியான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சரின் இந்த லண்டன் அரசுமுறைப் பயணக் குழுவில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவரது கல்லூரி கால நெருங்கிய நண்பரும், தற்போதைய அரசின் பொது நிகழ்வுகள் ஆலோசகருமான விஷ்ணு ரெட்டியும் உடன் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் செல்வதற்காக விஐபி கேட் எண் 6-க்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் நண்பர் விஷ்ணு ரெட்டிக்கு அந்த விஐபி பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

தன்னுடன் வரும் நண்பருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்த முதலமைச்சர் விஜய், தனக்கு அளிக்கப்பட்ட விஐபி சலுகையை உடனடியாகத் தவிர்த்துவிட்டு, டெர்மினல் 2-ல் உள்ள மாற்றுப் பாதை வழியாகத் தன் நண்பர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடந்து சென்றார். நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் போதிலும், நண்பருக்காகத் தன் விஐபி பாதையையே மாற்றிய முதலமைச்சரின் இந்தச் செயல், அவர்களுக்கிடையேயான நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த 1992-ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே (92 பேட்ச்) விஜய்யும் விஷ்ணு ரெட்டியும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். 34 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த லயோலா நட்பைப் பதவியில் இருக்கும்போதும் விஜய் விட்டுக்கொடுக்காமல் மதிப்பளித்து வருவது குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.