ஈரானை தாக்குவது என்று இஸ்ரேல் 1 வருடத்திற்கு முன்னரே திட்டம் தீட்டி விட்டது. ஆனால் ஈரான் எப்பொழுதுமே விழிப்பாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான், டொனால் ரம் பெரும் நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருந்தார்.
அதாவது ஈரான் தலைவர்கள் சிலரோடு பேசி, ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்வது போல நாடகம் ஆடியது மட்டும் அல்லாது. ஈரான் மீது எந்த ஒரு தாக்குதலையும் நடத்த வேண்டாம். அவர்களை பேச்சு வார்த்தை மேசைக்கு அழைக்க இருக்கிறேன் என்று டொனால் ரம் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால் இவை அனைத்துமே பொய். பச்சைப் பொய்… ஆனால் இதனை ஈரான் நம்பி விட்டது. அமெரிக்காவோடு தாம் பேச்சுவார்த்தையில் ஈடு பட உள்ளதால், இஸ்ரேல் தம்மீது தாக்குதல் நடத்தாது என்று ஈரான் நம்பியதே, இன்று ஈரானின் முப்படை தளபதி கொல்லப்பட்டதற்கு நல்ல உதாரணம். அமெரிக்க அதிபர் ரம் மற்றும் இஸ்ரேல் அதிபர் நித்தின் யாஹூ இணைந்து மேற்கொண்ட தாக்குதல் தான் இது.
தற்போது தான் இவை வெளிச்சத்திற்கு வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்கிய பின்னர் ஈரான் தூதுவர் அமெரிக்க தூதுவரை சந்தித்து ஏன் இப்படி நடந்தது ? என்று கேள்வி எழுப்ப அங்கே வைத்து தான் முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.