தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் ‘வி தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை,டெல்லியில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு வழங்கிய தேசிய அளவிலான பொறுப்புகள் மற்றும் ஆஃபர்களைத் தான் ஏற்க மறுத்துவிட்டதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கட்சித் தலைமையைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோது, மத்திய அளவில் முக்கிய பொறுப்புகளை வகிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இருப்பினும், தமிழக அரசியலில் தீவிரமாகப் பங்காற்றுவதே தனது முதன்மை நோக்கம் என்பதால், டெல்லியில் தங்கி பணியாற்றும் வாய்ப்பை அன்போடு நிராகரித்து விட்டதாக அவர் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
“தமிழக மக்களுக்காகவும், இங்குள்ள இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் களத்தில் நின்று பணியாற்றவே விரும்புகிறேன். பதவிகளை விடத் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவதே எனது லட்சியம்” என அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். தனது இந்த முடிவை அமித் ஷாவிடம் நேரில் விளக்கிவிட்டுத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி ஆஃபர்களைத் தூக்கிப் எறிந்துவிட்டுத் தமிழகத்தில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் மூலம் களமிறங்கியுள்ள அண்ணாமலையின் இந்தப் பேச்சு, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மேலிடத்தின் அழுத்தத்தையும் மீறித் தமிழக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் அவரது இந்த உறுதியான நிலைப்பாடு, மாநில அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.