Posted in

சி.வி. சண்முகம் -விஜய் பாஸ்கருக்கு தவெக ஏன் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை ?

அதிமுக-வின் சீனியர் விக்கெட்டுகளான சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் ஏன் இன்னும் தவெக-வில் ஐக்கியமாகவில்லை என்பது, அவங்க சொந்தக் கட்சிக்காரர்களுக்கே புரியாத பெரிய புதிராக நீடிக்குது. ‘இந்தா வர்றேன், அந்தா வர்றேன்’ என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எக்ஸ்பிரஸ் ட்ரெயினுக்குக் காத்திருப்பது போல நாட்களைக் கடத்தி, தொகுதி மக்களிடம் ரகசியக் கலந்தாலோசனை நடத்தி வந்தார். மக்கள் கிட்ட அவர் வேறொன்றும் கேட்கவில்லை; “நான் மட்டும் சைக்கிளை மாத்தி தவெக-வில் நின்னா நீங்க ஓட்டுப் போடுவீங்களா, மாப்ளே?” என்றுதான் சென்டிமென்ட்டாக ரூட் போட்டுப் பேசி வந்துள்ளார்.

அவரோட ஏரியா மக்களும் “நீங்க கிளம்புங்க அண்ணே, நாங்க பாத்துக்கிறோம்!” என்று பச்சைக் கொடி காட்ட, உற்சாகமான விஜயபாஸ்கர் ஒரு செம லோக்கல் கால்குலேஷன் போட்டுப் பார்த்துள்ளார். தான் தவெக-வில் நின்றால் தொகுதியில் அசால்ட்டாக 48% வாக்குகள் கன்பார்ம் என்பதைத் துல்லியமாகக் கணித்து, அந்த அனாலிசிஸ் ரிப்போர்ட்டை அப்படியே தவெக மேலிடத்திற்குத் தூது அனுப்பி வைத்துள்ளார். “டேட்டா பக்கா, இனிமே உங்க இஷ்டம்” என்று அவர் வெயிட்டிங் லிஸ்டில் கிடக்க, தவெக தரப்போ அந்த ஃபைலை வச்சு இன்னும் யோசிச்சுட்டே இருக்காங்க.

ஒருவேளை தவெக மட்டும் ஓகே சொல்லி ‘கிரீன் சிக்னல்’ காட்டிவிட்டால், விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு ‘தளபதி’ பக்கம் தாவிவிடுவார் என்பது உறுதி. இதனால் அந்தத் தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் திருவிழா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், சி.வி.சண்முகத்தின் கதையோ டோட்டலாக வேறு மாதிரி இருக்கு; கொஞ்சம் ‘டல்லா’ ஓடிக்கிட்டு இருக்கு.

“அண்ணன் மேல ஏகப்பட்ட லோக்கல் கம்ப்ளைன்ட்ஸ் இருக்கு பாஸ், அவரை முழுசா ஸ்கேன் (Scan) பண்ணிப் பார்த்துட்டுதான் வண்டியில ஏத்தணும்” என்று தவெக நிர்வாகிகள் விஜயிடம் போட்டுக்கொடுத்துள்ளனர். இதனால் சி.வி.சண்முகத்தை செக் போஸ்ட்டில் நிறுத்தி வைத்திருப்பது போல தவெக ஹோல்டில் வைத்துள்ளதால், அவரோட நிலைமைதான் இப்போது ரொம்பவே கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஆளுங்க ஆவலோடு காத்துக் கிடக்க, தவெக அட்மிஷன் போடாமல் இழுத்தடிப்பது தமிழக அரசியல் களத்தில் ஒரு சுவாரசியமான மைண்ட் கேமாகப் பார்க்கப்படுகிறது.