நடிகைகளுக்கு கணவராகும் ஆண்களுக்கு இந்த தகுதி இருக்கவேண்டும்!

நடிகைகளுக்கு கணவராகும் ஆண்களுக்கு இந்த தகுதி இருக்கவேண்டும்!

பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மிருனாள் தாகூர். இவர் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சீரியல் நடிகையாக வலம் வந்தார். அதன் மூலம் கிடைத்தது தான் திரைப்பட வாய்ப்பு. சீரியல் நடிகையாக இருந்து பிரபல நடிகையாக உச்சத்தை தொட்டு இருக்கும் மிருனாள் தாகூர் இனிய இரு மலர்கள் சீரியல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்த தொடர் இல்லத்தரசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்த தொடராக இருந்தது.

அதன் பிறகு பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த வந்த இவர் சீதாராமம் படத்தின் மூலமாக தென் இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனிடையே தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகைகளுக்கு அமையும் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என தனது கருத்து ஒன்றை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது, எங்களுக்கு அமையும் கணவர்கள் எங்கள் தொழிலையும் வாழ்க்கையும் இரண்டையும் சரியாக புரிந்து கொள்ளும் நபராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவரால் அவரால் எங்களுடன் பயணிக்க முடியும். சுதந்திரமாக எங்களது வேலையும் செய்ய முடியும் என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதாவது ஒரு நடிகையை நடிக்க விட வேண்டும் அதே நேரத்தில் கணவராகவும் இருக்க வேண்டும் முழு சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டும் என்பதை இதன் மூலம் அவர் தெளிவுபடுத்திருக்கிறார்.