தமிழக அரசியலில் அதிகாரப் படிநிலைகளைக் கடந்து, மனிதநேயம் மணம்வீசிய ஒரு உன்னதத் தருணம் இன்று வைகோ அவர்களின் இல்லத்தில் அரங்கேறியுள்ளது. முதலமைச்சர் விஜய் அண்ணன் வைகோவை காண வருகிறார் என்ற செய்தியைக் கேட்டதுமே, வைகோ அவர்களின் வீட்டில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் அந்த எளிய பணிப் பெண்களுக்கு ஒரு தீராத ஆசை பிறந்துள்ளது. “எப்படியாவது நம்ம தலைவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்ற ஏக்கத்தில் இருந்த அவர்களிடம், அண்ணன் வைகோ அவர்கள் பெருந்தன்மையுடன், “அதுக்கென்னம்மா… விஜய் நம்ம வீட்டுப் பையன்! அவர் கூடத் தாராளமா நீங்க படம் எடுக்கலாம், கொஞ்ச நேரம் காத்திருங்க” என்று கூறி நெகிழ வைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் வைகோ அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்ததும், தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மருமகள் எனத் தனது மொத்தக் குடும்பத்தையுமே விஜய்க்கு அறிமுகப்படுத்தினார் வைகோ. ஆனால், அதையெல்லாம் விட நெகிழ்ச்சியான தருணம் அதன் பிறகுதான் தொடங்கியது. அங்குப் பணிபுரியும் பெண்கள், தங்களது வீட்டுப் பிள்ளைக்குப் பதவியும் புகழும் வந்துவிட்ட மகிழ்ச்சியில், உணர்ச்சிப்பெருக்கில் ஓடி வந்து விஜய்க்கு “திருஷ்டி” கழித்தனர். “நீங்க இன்னும் நீண்ட காலம் நல்லா இருக்கணும் அண்ணா…” என்று அவர்கள் நாத்தழுதழுக்க வாழ்த்தியபோது, அந்த இடமே ஒரு உணர்ச்சிக் கடலில் மூழ்கியது.
மாநிலத்தின் முதலமைச்சர் என்கிற எந்த ஒரு அதிகாரத் தோரணையும் இல்லாமல், அந்த எளிய பணிப்பெண்களைத் தனது உடன்பிறப்புகளாகக் கருதி, அவர்களோடு மிகவும் அன்புடன் அரவணைத்து நின்று விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒரு பெரும் நட்சத்திரமாக, ஒரு மாநிலத்தின் முதல்வராக உச்சத்தைத் தொட்ட ஒரு மனிதன், இவ்வளவு எளிமையாகவும் பண்பாகவும் நடந்துகொண்ட விதம் அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் எளிய மனிதர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு விஜய் இன்று ஒரு மாபெரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்.
சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு மனிதனாக விஜய் இன்று அனைவரின் இதயங்களையும் வென்றுவிட்டார். “பதவி வரும்போது பணிவு வரவேண்டும்” என்பதற்கு ஏற்ப, வைகோவின் அந்தப் பண்பும், விஜய்யின் அந்தப் பாசமும் இணைந்து இன்று ஒரு புதிய அரசியலைத் தொடங்கி வைத்துள்ளது. உண்மையில் விஜய் ஒரு பெரும் மகான் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்!