வடகொரியாவில் நிலவி வரும் தீவிர உணவுப் பஞ்சத்திற்கு இடையே, ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட அவசர கால தானியங்களை ரகசியமாகத் திருடி விற்பனை செய்ய முயன்ற உயர்நிலை ராணுவக் கர்னல் ஒருவருக்கு, சக ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள ராணுவப் பயிற்சி மைதானத்தில் இந்த பகிரங்கத் தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியக் கடலோரப் படைப்பிரிவில் பணியாற்றி வந்த அந்த மூத்த கர்னல், தனது கட்டுப்பாட்டில் இருந்த அரசு தானியக் கிடங்கில் இருந்து பல டன் எடையுள்ள அவசர கால தானியங்களை நள்ளிரவில் திருடியுள்ளார். அவற்றை ராணுவ வாகனங்கள் மூலம் வெளிச்சந்தையில் கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கண்காணிப்பு அமைப்புகளிடம் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
நாடே கடும் உணவுத் தட்டப்பாட்டில் தவித்து வரும் நேரத்தில், மக்கள் மற்றும் ராணுவத்திற்குச் சொந்தமான தானியங்களைத் தனது சொந்த லாபத்திற்காகக் கடத்த முயன்ற குற்றத்திற்காக அவருக்கு ராணுவ சிறப்பு நீதிமன்றம் உடனடியாக மரண தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து, ராணுவத்தில் ஊழல் மற்றும் கையாடலில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவரது படைப்பிரிவைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளை நேரில் வரவழைத்து, அவர்கள் கண்முன்னேயே துப்பாக்கிகளால் சுட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராணுவத்திலும் அரசு நிர்வாகத்திலும் ஊழல் அல்லது கையாடலில் ஈடுபடும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் எவ்விதத் தாட்சணியமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் எச்சரித்துள்ளது. சொந்தக் கர்னல் ஒருவரையே துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றியுள்ள இந்த அதிரடிச் சம்பவம் வடகொரிய ராணுவ வட்டாரத்தில் பெரும் அச்சத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.